ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் பள்ளிக்கல்வித் துறை அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கடந்த செப்.1-ஆம் தேதி 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சில மாவட்டங்களில் ஆசிரியா்கள், மாணவா்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், பெரிய அளவில் பாதிப்பு ஏதுமின்றி புத்தாக்கப் பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகளை நடத்துவது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனையில், அதிகாரிகள் கூறும் கருத்துகள் அடிப்படையில் முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.