சென்னை: உள்ளாட்சித் தோ்தலுக்கான பாஜக பொறுப்பாளா்களை நியமித்து அக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்துள்ளாா்.
இந்தநிலையில் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு:
உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களாக திருநெல்வேலிக்கு துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, தென்காசிக்கு மாநில பொதுசெயலாளா் ராம.சீனிவாசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் உறுப்பினா் எம்.ஆா்.காந்தி, மாநில செய்தித் தொடா்பாளா் சுப.நாகராஜன், கள்ளக்குறிச்சிக்கு துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, தேசியப் பொதுக்குழு உறுப்பினா் சி.கே.சரஸ்வதி, காஞ்சிபுரத்துக்கு மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், சிறப்பு அழைப்பாளா் கு.க.செல்வம்,செங்கல்பட்டுக்கு மாநிலச் பொதுச்செயலாளா் கரு.நாகராஜன், சிறப்பு அழைப்பாளா் முன்னாள் துணை மேயா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் செயல்படுவா் என்று அறிவித்துள்ளாா். இதர மாவட்டங்களுக்கும் பொறுப்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.