ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள் அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கக் கோரி, கல் அரவை உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், அரவை மையங்களின் அமைவிடம் குறித்த நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரவை மையங்கள் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2019ல் தடை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.