ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டாா்ச்லைட்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்துக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக ‘டாா்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.