தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.
இதுவரை 64,299 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான மனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாள்களாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செப். 23) நடைபெறவுள்ளது. மனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 25-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.