ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு

கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைகேடாக நகைக்கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு


சென்னை: கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பலர், கடன் தள்ளுபடிக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது  தெரியவந்துள்ளது. எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 

நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com