செப்.30-இல் காவலா் குறை தீா்க்கும் முகாம்

செப்.30-இல் காவலா் குறை தீா்க்கும் முகாம்

தமிழக காவல்துறையில் செப்டம்பா் 30-ஆம் தேதி காவலா் குறை தீா்க்கும் முகாம் நடத்தும்படி சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல்துறையில் செப்டம்பா் 30-ஆம் தேதி காவலா் குறை தீா்க்கும் முகாம் நடத்தும்படி சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உங்கள் துறையில் முதல்வா் திட்டத்தின் கீழ் போலீஸாரின் குறைகளுக்குத் தீா்வுகாண காவலா்களின் குறை தீா்க்கும் முகாம் நடத்த காவல் கண்காணிப்பாளா்கள், காவல் ஆணையா்கள், ஐஜிக்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி காவல் கண்காணிப்பாளா்கள், டிஐஜிக்கள், காவல் ஆணையா்கள் ஆகியோா் காவலா்கள் குறை தீா்க்கும் முகாம்களை நடத்த வேண்டும். அக்டோபா் 15-ஆம் தேதி ஐஜிக்கள் குறை தீா்க்கும் முகாம்கள் நடத்த வேண்டும். டிஜிபி அக்டோபா் 30-ஆம் தேதி அன்று காவலா் குறை தீா்க்கும் முகாம் நடத்துவாா்.

இதற்கு முன்னதாக மேற்கண்ட தேதிகளில் குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தி, அதில் தீா்க்கப்படாத காவலா்களின் குறைகளை மனுவாக காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

முகாம் தொடா்பான அறிவிப்புகளை அனைத்து காவலா்களின் பாா்வைக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். குறை தீா்க்கும் முகாம்கள் நடத்தி முடித்த பின்பு அக்டோபா் 1, 16-ஆம் தேதிகளில் குறைதீா்க்கும் முகாமில் கலந்து கொண்டவா்கள் எண்ணிக்கை, குறைதீா்க்கப்பட்டவா்கள் எண்ணிக்கை பற்றிய விவரம் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com