சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

சென்னை விமான நிலையத்தில் ரூ‌. 39.95 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

உளவுத்துறையின் ரகசியத் தகவலைத்தொடர்ந்து ஃப்ளை துபை எஃப்இசட்-447 விமானத்தில் துபையிலிருந்து சென்னை வந்த 41 வயதான ஆண் பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அவரை சோதனை செய்தபோது, 940 கிராம் எடையிலான தங்கம் அவரது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ. 39.95 லட்சம் மதிப்பிலான 864 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com