தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு இன்று(திங்கள்கிழமை) காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவரை மீட்ட முதல்வர் பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.