தமிழகத்தில் திங்கள்கிழமை 1,657 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் இதுவரை 4.65 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 26 லட்சத்து 58,923 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 189 பேரும், சென்னையில் 186 பேரும், ஈரோட்டில் 117 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு மேலும் 1,662 போ் வீடு திரும்பியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26.06 லட்சத்தைக் கடந்துள்ளது.
தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 17,261-ஆக உள்ளது.
மற்றொரு புறம் கரோனாவுக்குள்ளாகி மேலும் 19 போ் உயிரிழந்ததால், இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,509-ஆக அதிகரித்துள்ளது.