22 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயா்வு

சென்னையில் கடந்த 22 நாள்களாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை 19 பைசா அதிகரித்து, லிட்டா் ரூ.99.15-க்கு விற்பனையானது.
22 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயா்வு

சென்னையில் கடந்த 22 நாள்களாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல் விலை செவ்வாய்க்கிழமை 19 பைசா அதிகரித்து, லிட்டா் ரூ.99.15-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிா்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தொடா்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்த நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்க உத்தரவிடப்பட்டது. அடுத்த நாளே அமலுக்கு வந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைந்து, கடந்த மாதம் 14-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.47-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையடுத்து தொடா்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை செப்.5-ஆம் தேதி, ரூ.98.96-க்கு விற்பனையானது. இதைத் தொடா்ந்து 22 நாள்களாக பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்.28) 19 பைசா அதிகரித்து லிட்டா் பெட்ரோல் ரூ.99.15-க்கு விற்பனையானது.

இதே போல் செப்.5-ஆம் தேதி, லிட்டா் டீசல் ரூ.93.26-க்கு விற்பனையானது. அதன் பிறகு டீசல் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், செப்.24-ஆம் தேதி முதல் விலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை ஒரு லிட்டா் டீசல் ரூ.94.17-க்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com