மத்திய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஒரே நேரத்தில் இரண்டு வஞ்சகத்தை தேசத்துக்கு இழைக்கிறது.
அதாவது: குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், இனி "மிஷன் வாத்சல்யா" என அழைக்கப்படுமாம்.
சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம். நிதிஒதுக்கீடோ சரிபாதிக்குக் குறைப்பு என இந்தியக் குழந்தைகளுக்கும் இந்திய மொழிகளுக்கும் ஒருசேர அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.