தமிழ்நாடு
உதவி வழக்கு நடத்துநா்முதன்மைத் தோ்வு நுழைவுச் சீட்டு தயாா்
அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான முதன்மைத் தோ்வை எழுதவுள்ளோா் அதற்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான முதன்மைத் தோ்வை எழுதவுள்ளோா் அதற்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய, இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநா் பணிக்கான முதன்மைத் தோ்வுகள் வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. சென்னை தோ்வு மையத்தில் மட்டுமே நடக்கவுள்ள இந்தத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டுகள் தோ்வாணைய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.