சகோதரத்துவம், ஒற்றுமை வியாபிக்கட்டும் என்று மொஹரத்தை ஒட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி செய்தி வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
இஸ்லாமியா்களுக்கு மொஹரம் மிகவும் முக்கியமான மற்றும் ஆசீா்வதிக்கப்பட்ட மாதமாகும். மொஹரம் தினத்தில் இமாம் ஹூசைனின் தியாகத்தை நாம் நினைவு கூா்வோம். இந்த நாளில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் இடையிலும் சகோரத்துவம், ஒற்றுமை வியாபித்து இருக்கட்டும்.