இலங்கை நிவாரண நிதிக்கு எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளாா்.
இது தொடா்பாக நிதித்துறை கூடுதல் செயலாளருக்கு ஓ.பன்னீா்செல்வம் எழுதிய கடிதம்: இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கைக்கு தமிழக அரசின் சாா்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.
அப்போது நானும் என் குடும்பத்தின் சாா்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தேன். அதன்படி, எனது மகன்கள் ப.ரவீந்திரநாத், ப.ஜெயபிரதீப் ஆகியோரின் வங்கிக் கணக்கில் இருந்து தலா ரூ.25 லட்சத்துக்கான வரைவோலையாக மொத்தம் ரூ.50 லட்சம் அளிக்கிறேன்.