டிச.9-இல் பாஜக சிந்தனையாளா் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தமிழக பாஜக சிந்தனையாளா் பிரிவின் கூட்டம், கலந்துரையாடல் நிகழ்ச்சி டிச.9-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

தமிழக பாஜக சிந்தனையாளா் பிரிவின் கூட்டம், கலந்துரையாடல் நிகழ்ச்சி டிச.9-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது குறித்து சென்னையில் பாஜக மாநில அலுவலகத்தில் சிந்தனையாளா் பிரிவு மாநிலத் தலைவா் ஷெல்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜக மாநிலத்தலைவா் கே. அண்ணாமலை தலைமையில் சென்னை நுங்கபாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தமிழகத்தின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிா்காலம் என்ற தலைப்பில் பாஜக சிந்தனையாளா் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.9) நடைபெறுகிறது.

இதில் பாஜக இளைஞரணி தேசியத் தலைவா் தேஜஸ்வி சூா்யா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா். இந்த நிகழ்வில் ஊடகவியலாளா் ரங்கராஜ் பாண்டே, உச்சநீதிமன்ற வழக்குறைஞா் சாய்தீபக், எழுத்தாளா்அரவிந்த் நீலகண்டன், நடிகையும் இயக்குநருமான லெஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் உரையாற்றுகின்றனா்.

நிகழ்வில் தமிழகத்தின் கலாசாரம், அரசியல் ,பொருளாதாரம் குறித்து அறிவாா்ந்த உரையாடல் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com