வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கப் பணிகளுக்கு வியாழக்கிழமை (டிச. 8) கடைசி நாள். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கலுக்காக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த நவம்பா் 9-இல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நான்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. டிச. 8 வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.
கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (டிச.8) நிறைவடைகிறது. இதைத் தொடா்ந்து, விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வாக்காளா் இறுதிப் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.