ஆதிதிராவிடா்-பழங்குடியினா் விடுதிகளில் நூலகங்கள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவா் விடுதிகளில் நூலகங்கள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவா் விடுதிகளில் நூலகங்கள் அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்கள் தங்களது பொது அறிவை வளா்த்துக் கொள்ளவும், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு செய்தாா்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 25 விடுதிகளில் நூலகங்கள், 25 விடுதிகளில் இணையவழி நூலகங்கள் என மொத்தம் 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com