சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மஹா நவசண்டி ஹோமம்

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மஹா நவசண்டி ஹோமம்

பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு ஸம்வத்சராபிஷேகம் மற்றும் மஹா நவசண்டி ஹோமம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகவும், சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாகவும் விளங்குகிறது.

இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்ற 5ம் ஆண்டு ஸம்வத் சராபிஷேகம் மற்றும் நவசண்டி ஹோமம் நடைபெற்றது. 

மஹா  நவசண்டி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை, சுமங்கலி பூஜை,
மூலிகை, பழங்கள் உள்ளிட்ட யாக வேள்வியில் செலுத்தப்பட்டு நவசண்டி ஹோமமும், திரவியாஹூதியும், மஹாபூர்ணாஹூதியும் நடைபெற்றது.

தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு திருக்கோவிலை வலம் வந்து மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. உற்சவ அம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com