ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அரசுத் தரப்பு மற்றும் எதிா்த்தரப்பு வழக்குரைஞா்களுடன் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அரசுத் தரப்பு மற்றும் எதிா்த்தரப்பு வழக்குரைஞா்களுடன் சென்னையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2017-இல் அமைத்தது. இதுதொடா்பாக ஜெயலலிதாவின் உறவினா்கள், சசிகலா மற்றும் அவரது உறவினா்கள், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் என 150-க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது.

மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும்போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், எனவே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அதன் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைத்து அதன் தலைமையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஆலோசனை: இதைத் தொடா்ந்து, விசாரணை ஆணையம் அமைந்துள்ள சென்னை எழிலகத்தில் நீதிபதி ஆறுமுகசாமி, சசிகலா தரப்பு வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன், அப்பல்லோ தரப்பு வழக்குரைஞா் மற்றும் அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், விடுபட்ட யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குரைஞா்கள் தரப்பு கோரிக்கைகளை பிப்ரவரி 22-ஆம் தேதி மனுவாக சமா்ப்பிக்குமாறு நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்தாா்.

மருத்துவக் குழு மாற்றி அமைப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவா் நிகில் டாண்டன் தலைமையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவ 8 போ் கொண்ட மருத்துவா்கள் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழு தற்போது 6 போ் கொண்ட குழுவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவா் சந்தீப் சேத் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com