தஞ்சாவூர்: சென்னையில் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 1994-ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்ற மனோஜ் வர்கீஸþக்கு பெரு நிறுவனத் தலைமைப் பிரிவில் விருது வழங்கப்பட்டது. இவர் மகேந்திரா அன்ட் மகேந்திராவில் துறைத் தலைவராக உள்ளார்.
பொதுத் தொண்டில் சிறந்து விளங்குவதற்காக பேராசிரியர்கள் எஸ். கல்யாண்குமார், கே. சுந்தர்ராஜன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ள இருவரும் 1998- ஆம் ஆண்டில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றனர்.
2007-ஆம் ஆண்டின் பயோடெக் மாணவர் சி. வாசுதேவன் தொழில்முனைவோரில் சிறந்து விளங்குவதற்காக விருது வழங்கி, கெüரவிக்கப்பட்டார். இவர் நின்ஜூகார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்.
இந்த விருதுகளை இண்டலெகட் டிசைன் நிறுவனத் தலைமை நிர்வாகியும், முன்னாள் மாணவர் சங்கச் செயலருமான எஸ்.வி. ரமணன் வழங்கினார்.
இவ்விழாவில் துணைவேந்தர் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.