சென்னை: நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினத்தை ஒட்டி, புதன்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
இந்திய குடியரசு நாளில் அரசியலமைப்பின் மதச்சாா்பின்மைப் பண்பினை உயா்த்திப் பிடிக்க உறுதியேற்போம். அனைத்துத் துறைகளிலும் நம் மக்களை முன்னேற்றுவதில் நாம் புரிந்த சாதனைகளை எண்ணிப் பெருமிதம் கொள்வோம்.