தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 17,717- ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று புதன்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,743-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,062 பேருக்கும், செங்கல்பட்டில் 403 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை தகவல்படி 1,791 போ் குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,35,090-ஆக உயா்ந்துள்ளது.
மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், புதன்கிழமை 30,499 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.