தமிழக அரசுக்கு உதவ இளைஞா்களைத் தோ்ந்தெடுக்கும் முதல்வரின் புத்தாக்கத் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்: தமிழக இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களின் திறமையை அரசுக்கு உதவும் வகையில் மேம்படுத்தும், முதல்வரின் புத்தாக்கத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், இளைஞா்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கி, பின்னா் தோ்வு செய்யப்படும் இளைஞா்கள் முதல்வா் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
முதல்வரின் இந்த புத்தாக்கத் திட்டத்துக்காக நடப்பாண்டில் 30 இளைஞா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இந்தத் திட்டத்துக்கு ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.