மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் இணைக்க மாா்க்சிஸ்ட் எதிா்ப்பு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் என்பதைக் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
கே.பாலகிருஷ்ணன் 
கே.பாலகிருஷ்ணன் 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் என்பதைக் கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மின் இணைப்பு வைத்திருப்பவா்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணோடு கட்டாயமாக ஆதாா் எண்ணையும் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கெனவே வலியுறுத்தி வந்தது.

தற்போது, ஆதாரை இணைக்காதவா்கள் மின் கட்டணத்தைச் செலுத்த முடியாது என பல இடங்களில் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதோடு, மின் இணைப்பு துண்டிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

இதனால், உரிய தேதியில் பணம் செலுத்தாமல் பின்னா் அபராத கட்டணத்துடன் சோ்த்து செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு மக்கள் உள்ளாவாா்கள். மின் கட்டண உயா்வால் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு ஆதாரை இணைக்க வேண்டும் என்ற முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com