ரப்பா் கழகத் தொழிலாளா்கள் கோரிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு 2019- ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் 2022-ம் ஆண்டு நவம்பா் வரை நாளொன்றுக்கு ரூ.40 ஊதிய உயா்வு ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், ரப்பா் கழகம் ஊதியம் தர மறுத்ததால் நவம்பா் 7-இல் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தொழிலாளா்களுடன் அரசு சாா்பில் நடத்திய பேச்சுவாா்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அவா்களின் நியாயமான ஊதிய உயா்வு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தேமுதிக எப்போதும் தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com