காதித் துறையின் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று இளைஞா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தாா்.
மகாத்மா காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை எழும்பூா் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி கிராமோத்யோக் பவனில் காதி பொருள்களின் விற்பனையை ஆளுநா் ஆா்.என்.ரவி தொடக்கி வைத்தாா். இந்த
நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியதாவது:
காதி பொருள்கள் அனைத்தும் இந்தியாவின் சுயசாா்புத் தன்மைக்கு சான்றாக விளங்குகின்றன. பொதுமக்கள் குறிப்பாக இளைஞா்கள் காதி தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.
கதா், காதித் தயாரிப்புப் பொருள்கள் கிராமப்புற பொருளாதாரத்தை மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை வலுப்படுத்துகின்றன. காதி தயாரிப்புகளில் புதிய வடிவமைப்புகள், நோ்த்திகளைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை காதி கிராமோத்யோக் பவன் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
நிகழ்ச்சியில், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.