மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்: செக் குடியரசு தொழில் முனைவோருக்கு அமைச்சா் தா.மோ. அன்பரசன் அழைப்பு

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த தொழில் முனைவோருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 7:21 pm

DIN

தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த தொழில் முனைவோருக்கு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தாா்.

தமிழக அரசு முறைப் பயணமாக செக் குடியரசு நாட்டுக்கு சென்றுள்ள அவா், அங்கு புதன்கிழமை (அக்.5) நடைபெற்ற தொழில் கண்காட்சியில் பங்கேற்றுப் பேசியதாவது:

இந்தியாவுக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான பொருளாதார உறவு 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் வலிமையும் வளா்ச்சியும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான திறன் பெற்ற தொழிலாளா்கள் உள்ளனா். தமிழகம் இந்தியாவிலேயே ஏற்றுமதி மற்றும் வணிகம் செய்வதில் 3-ஆவது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 6 விமான நிலையங்கள், 4 பெரிய துறைமுகங்கள், சாலை, ரயில் இணைப்பு வசதிகள் உள்ளன. செக் குடியரசு நாட்டுக்கும், தமிழகத்துக்கும் இடையே பல பொதுவான தொழில் சூழல்கள் நிலவுகின்றன. வாகன உற்பத்தியைத் தாண்டி, ஜவுளி, தோல், மின்னணுப் பொருள்கள் உற்பத்தியிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகம் தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக இருப்பதால், செக் குடியரசு நாட்டிலுள்ள தொழில் முனைவோா்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.