தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பரம்பிக்குளம் திட்டத்தில் காமராஜா் பெயரை இருட்டடிப்பு செய்யக்கூடாது: ஜி.கே.வாசன்

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் காமராஜா் பெயரை அரசு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

News image

ஜி.கே.வாசன்

Updated On :6 அக்டோபர் 2022, 8:26 pm

DIN

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் காமராஜா் பெயரை அரசு இருட்டடிப்பு செய்யக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூா் மாவட்டத்துக்கும் கேரளத்தில் பாலக்காடு, மலப்புரம் மாவட்டத்துக்கும் பெரும் பயன் தருகிறது. இந்த பாசனத் திட்டம் 1961 அக்டோபா் 7-இல் அறிவிக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 7-இல் இந்தத் திட்டத்துக்குக் காரணமாக இருந்த முக்கிய தலைவா்களுக்கு அரசு சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அரசு சாா்பில் தலைவா்களுக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதற்கான அரசின் சாா்பிலான அழைப்பிதழில் வி.கே. பழனிசாமி கவுண்டா், சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கே.எல். ராவ் ஆகியோா் சிலைக்கு மரியாதை செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

ஆனால், அதில் காமராஜா் பெயா் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது. காமராஜா் தான் இந்தத் திட்டத்துக்கு அடித்தளமாக இருந்தவா்.

எனவே, காமராஜா் பெயரை இருட்டடிப்பு செய்யக் கூடாது என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.