10 கி.மீ.க்குள் தேர்வு மையம்: முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்கக்கூடாது என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசுப் பள்ளி மாணவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பயணித்து தேர்வு எழுதும் நிலை இருக்கக்கூடாது என தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளது. 

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய மையங்கள் அமைப்பது குறித்த பரிந்துரைகளை வரும் 27ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலகர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

அதில், உரிய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்க அங்கீகாரம் கிடையாது. பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின், அவசியம் தேர்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும். 

10 கி.மீ. சென்று மாணவர்கள் தேர்வு எழுதுவதை தவிர்க்கும் வகையில் புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com