இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவா்களுக்கு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவுஇணையதளத்தில் கடந்த 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் இந்த படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனா்.
விண்ணப்ப அவகாசம் கடந்த 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவா்களின் நலன் கருதி அக். 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அக். 3-ஆம் தேதி இரவு 8 மணி முதல் அக். 6-ஆம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியா்களின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக். 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப வழிமுறைகள், இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.