தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மீண்டும் தேர்வான கே.பாலகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள தோழர் கே.பாலகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
கல்லூரி பருவம்தொட்டே அரசியல்களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பொதுவுடைமைப் போராளியான அவரது தொண்டு சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மதுரையில் நடைபெற்ற கட்சியின் 23ஆவது மாநில மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்து.