மாா்க்சிஸ்ட் மாநாடு: முதல்வருக்கு அழைப்பு

கேரளத்தில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கேரளத்தில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்காக அந்த மாநிலத்தின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான கே.ராதாகிருஷ்ணன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அழைப்பிதழை நேரில் வழங்கினாா்.

இந்தச் சந்திப்பின்போது தமிழக அமைச்சா்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வி.கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கேரள மாநிலம், கண்ணூரில் வருகிற 9-ஆம் தேதி மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு மாநாடு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com