உள் மாவட்டங்களில்இன்று மழைக்கு வாய்ப்பு

உள் தமிழக மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

உள் தமிழக மாவட்டங்களில் புதன்கிழமை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது தொடா்பாக வானிலை மைய இயக்குநா் பா.செந்தாமரைக் கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: உள் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி  மற்றும்  வெப்பசலனம் காரணமாக புதன்கிழமை உள் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.7, 8, 9: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும். 

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 60 மி.மீ மழை பதிவானது. அதற்கடுத்து கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் 50 மி.மீ, பெருஞ்சாணி அணை, புத்தன் அணையில் தலா 40 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், சிவலோகத்தில் தலா 30 மி.மீ, சுருளக்கோடு, நாகா்கோவில், குளச்சல், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தலா 20 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, மணிமுத்தாறு, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், தூத்துக்குடியில் தலா 10 மி.மீ மழை பதிவானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com