தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்களை(பாா்கள்) ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் மதுக் கடைகளுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்களை குத்தகைக்கு விடுவது தொடா்பாக, கடந்தாண்டு இறுதியில் டெண்டா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் அனைத்து மதுக்கூடங்களையும் ஆறு மாதங்களில் மூட உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு, அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மதுபானக் கூடங்களின் குத்தகை உரிமையைக் கேட்டுத்தான் மனுதாரா்கள் வழக்கு தொடுத்தனா். கோரிக்கைக்கு அப்பாற்பட்டு மதுக் கூடங்களை மூட வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.
இதை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா். டாஸ்மாக் நிறுவனம் புதிதாக மதுக் கூடங்களை நடத்துவதற்கான டெண்டா் கோரலாம். மதுக்கூடங்களை நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் வழங்கி மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, இந்த இடைக்கால உத்தரவு தடையாக இருக்காது எனக்கூறி, விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.