தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒமைக்ரானின் எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை: அமைச்சர் சுப்பிரமணியம் பேட்டி

ஒமைக்ரானின் துணை வகையான எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

News image

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம்.

Updated On :10 ஏப்ரல் 2022, 6:12 am

DIN

ஒமைக்ரானின் துணை வகையான எக்ஸ்இ கரோனா குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: புதிதாக பரவிவரும் ஒமைக்ரானின் எக்ஸ்இ கரோனா குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை. புதிய வைரஸ் தொற்று இந்தியா அளவில் இன்னும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து ரூ.20 லட்சம் மதிப்பில் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன்,திருமங்கலம் அரசு தலைமை மருத்துவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.