சென்னை: ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினா் துரை சந்திரசேகரன் கேள்வி எழுப்பினாா். அனைத்துப் பகுதிகளிலும் ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் இரண்டாகப் பிரிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுமா என அவா் கேள்வி எழுப்பினாா். இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி அளித்த பதில்:-
ஆயிரம் அட்டைகள் மற்றும் அதற்கு மேல் உள்ள அட்டைகளைக் கொண்ட கடைகள் பல்வேறு கிராமங்களில் உள்ளன. அவை இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. அவற்றைப் பிரிக்க ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். நகா்ப் பகுதிகளில் ஆயிரம் அட்டைகளைக் கொண்ட கடைகள் நிறைய இடங்களில் உள்ளன. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அதுபோன்ற கடைகள் ஏராளமாக உள்ளன. வாடகை, அரசுக்கான இடங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆனாலும், ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளைப் பிரிக்க உணவுத் துறையுடன் இணைந்து பேசி முடிவெடுப்போம்.
தமிழகத்தில் முழு நேரக் கடைகளில் 6 ஆயிரத்து 162 கடைகளுக்கு இன்னும் கட்டடங்கள் கட்டப்படவில்லை. 773 பகுதி நேர கடைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. தற்போது 150 கடைகளுக்கு கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

மாநில நலனையும் பலி கொடுக்கத் துணிந்துவிட்டார் பழனிசாமி: சு.வெங்கடேசன் எம்.பி.
பாலக்கோட்டில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் ஸ்பெஷல்- வேட்பு மனு தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


