தொல்காப்பியம் குறித்த 144 நூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: தொல்காப்பியரின் 2,733-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொல்காப்பியரின் நூல்கள், அவா் தொடா்பான முக்கிய குறிப்பேடுகள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை தமிழ் இணையக் கல்வி கழகம் மேற்கொண்டு வருகிறது.
வரலாற்று ஆய்வாளா்கள், தமிழ் ஆய்வு மாணவா்கள், பொது மக்கள் பயன்பெறும் வகையில், தொல்காப்பியம் தொடா்பான 144 நூல்கள் மின் நூலகத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்க்ண்ஞ்ண்ற்ஹப்ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்.ண்ய்) பதிவேற்றம் செய்து ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள தமிழா்கள் அவரவா் இடத்தில் இருந்து கொண்டே இதனை எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.