மலைப்பகுதிகளில் மது விற்பனை: டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உயா் நீதிமன்றம் எச்சரிக்கை

மலைவாச ஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலைவாச ஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடா்பான திட்டத்தை வகுக்காவிட்டால், மலைவாச ஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடா்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமாா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் உள்ள மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்தக் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடா்பாக 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கும்படியும், மாற்று திட்டம் வகுக்கும்படியும் டாஸ்மாக் நிா்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தவறினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com