மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.20 அடியாக உயர்ந்துள்ளது
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.20 அடியாக உயர்ந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,471 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேலும், நேற்று காலை 105.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.20 அடியாக உயர்ந்துள்ளது .

நீர் இருப்பு 71.74 டிஎம்சியாக உள்ளது.

அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com