தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு பதிலாக பீடா பழக்கம் அதிகரித்துள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, வெற்றிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலை கல்லூரியை தனது தொகுதியில் அமைக்க வேண்டுமென காட்டுமன்னாா்கோவில் உறுப்பினா் சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் பன்னீா்செல்வம் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் வெற்றிலை உற்பத்தி குறைந்து விட்டது. உற்பத்தி மட்டுமின்றி, வெற்றிலை போடும் பழக்கமும் குறைந்துள்ளது. இளைஞா்கள் இப்போதெல்லாம் ஸ்வீட் பீடாவைப் போடுகிறாா்கள். அதிலும் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்ட பீடாவும் பயன்படுத்துகிறாா்கள். வெற்றிலை தொழில் செய்ய அனுபவம் வாய்ந்த அதிக வேலையாட்கள் தேவை.
ஆனாலும் வெற்றிலை உற்பத்தி குறையாமல் இருக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அளவுக்கு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 100 ஹெக்டேரில் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.