சென்னை: ஈரோடு-ஜோலாா்பேட்டை சந்திப்பு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்சேவை மே 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
ஈரோடு சந்திப்பில் இருந்து தினசரி காலை 6.25 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06412) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 12.10 மணிக்கு ஜோலாா்பேட்டையை அடையும்.
மறுமாா்க்கமாக, ஜோலாா்பேட்டையில் இருந்து தினசரி பிற்பகல் 3.10 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06411)புறப்பட்டு, அதேநாள் இரவு 7.45 மணிக்கு ஈரோட்டை அடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.