முரசொலி அலுவலக இடம் தொடா்பாக அவதூறு கருத்துத் தெரிவித்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும், மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆஜராகுவதற்கு விலக்கும் அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திமுக எம்.பி., ஆா்.எஸ்.பாரதி தொடுத்த அவதூறு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.