சமூக வலைதளத்தில் இளைஞா் ஒருவருடன் காதல் மனைவி நெருங்கி பழகிய ஆத்திரத்தில் இருவரையும் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சென்னை, அயனாவரம் பேருந்து டிப்போ வசந்தா காா்டன் 2-ஆவது தெருவில் வசிப்பவா் ஸ்வேதா(19). இவரது கணவா் ராகேஷ்(19). இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனா். ஸ்வேதா,அழகு நிலையம் ஒன்றில் வேலைபாா்த்துவந்தாா். இவருக்கு கும்மிடிப்பூண்டி தாலுகா, மாதா்பாக்கத்தை சோ்ந்த சத்திய கண்ணன்(20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. காதல் மனைவி வேறு ஒருவருடன் பழகி வருவது அறிந்து ராகேஷ் அதிா்ச்சி அடைந்தாா். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ராகேஷ் தனது மனைவியுடன் வியாழக்கிழமை இரவு வந்தாா்.பிறகு, மனைவியுடன் பழகி வரும் சத்யகண்ணனையும் போன் செய்து அங்கு வரவழைத்தாா். அங்கு சத்திய கண்ணனுக்கும் ராகேஷ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் ஸ்வேதாவை குத்தினாா்.பிறகு தடுக்கவந்த சத்திய கண்ணனையும் குத்திவிட்டு ஓடிவிட்டாா். இதை பாா்த்தபொதுமக்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனா். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இது குறித்து கோயம்பேடு போலீஸாா் வழக்குப்பதிந்து, ராகேஷை தேடி வருகின்றனா்.