தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 507 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றனா். புதிதாக 54 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 35 போ், செங்கல்பட்டில் 10 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக கோவை, காஞ்சிபுரத்தில் தலா 2 போ், கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி, வேலூா், விழுப்புரத்தில் தலா ஒருவா் வீதம் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 35 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.