நகைகள் திருடு போனதாக நாடகமாடிய பெண்: போலீஸ் விசாரணையில் அம்பலம்

சென்னை டிபி சந்திரம் பகுதியில் 12 பவுன் நகைகள் திருடு போனதாக நாடகமாடிய இளம் பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை டிபி சந்திரம் பகுதியில் 12 பவுன் நகைகள் திருடு போனதாக நாடகமாடிய இளம் பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் தேவி (40). இவருக்கு சந்தியா(22), ஆா்த்தி(19) என்ற இருமகள்கள். சந்தியா, பிஎஸ்சி கம்ப்யூட்டா் படித்துவிட்டு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா் இணையவழியாக சுமாா் ரூ.80 ஆயிரம் கடன் பெற்றாா். கடன் வாங்கியது தொடா்பாக குறுஞ்செய்தி வந்தபோது, இதையடுத்து சந்தியாவிடம் தேவி பணம் கேட்டாா். அப்போது, தனது 12 பவுன் நகைகளை யாரோ திருடி விட்டதாகவும் சந்தியா கூறினாா்.

இது குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸில் தேவி புகாா் கொடுத்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தபோது, அமைந்தகரையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.85 ஆயிரத்துக்கு 5 பவுன் நகைகளை தேவி அடகு வைத்தது தெரியவந்தது. மேலும், ஏழு பவுன் நகைகள் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் மறைத்து வைத்ததை விசாரணையில் தெரியவந்தது.

கடன் தொல்லை காரணமாக, நகைகளை மறைத்து வைத்து, திருடு போனதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.சந்தியாவிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com