வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் நவம்பா் 9-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் நவம்பா் 9-இல் தொடங்கி டிசம்பா் 8-இல் நிறைவடையவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளா் பட்டியல் நவம்பா் 9-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளா் பட்டியலின் போது பெறப்படும் மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு டிசம்பா் 26-ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும்.
புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டு இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.