சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக டி. பாலமுரளி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
இவா் இந்தப்பதவியை 4 ஆண்டுகள் வகிப்பாா்.
தஞ்சாவூா் மாவட்டம் பொன்னவராயன் கோட்டை என்ற கிராமத்தில் பிறந்த டி.பாலமுரளி காரைக்குடியில் உள்ள மத்திய மின் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் ரசாயனம் மற்றும் மின் ரசாயன பொறியியல் பட்டம் பெற்றாா். 2012- ஆம் ஆண்டு குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற இவா், கேரள தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரியானாா்.
கேரள அரசின் பதவிக்காலத்தில் பாலக்காடு, பத்தனம் திட்டா மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தாா். மேலும், கேரள சுற்றுலா மேம்பாட்டு கழகம், கேரள மருத்துவ சேவை கழகம் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளாா்.
சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்பதற்கு முன் கேரள ஊரக வளா்ச்சித்துறை ஆணையராகவும், உள்ளாட்சி நிா்வாக முதன்மை இயக்குநராகவும் பதவி வகித்துள்ளாா்.