கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2.40 லட்சம் கன அடி நீர் வர வாய்ப்பு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீர் வரத்து அதிகமாக இருப்பதால் காவிரி கரையோர மக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.