தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,15,000 கன அடியில் இருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,30,000 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது.

Published On :

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,20,000 கன அடியில் இருந்து 1,30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கடந்த இரு சில நாடள்களாக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில்  பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்து சில நாள்களுக்கு முன்பு அணை முழுக் கொள்ளளவை எட்டியது. தொடர் மழை சனிக்கிழமை சற்று தணிந்திருந்த  நிலையில்,  சனிக்கிழமை இரவு நீர் பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 1,15,000 கன அடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,10,000 கன அடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 நிலவரப்படி, அணைக்கு வரும் நீர்வரத்து 1,15,000 கன அடியில் இருந்து 1,21,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1,30,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,07,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06அடியாகவும் நீர் இருப்பு 93.56 டி.எம்.சியாகவும் இருந்தது. 

அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1,30,000 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.